Kathir News
Begin typing your search above and press return to search.

தேசிய இளைஞர் விழா : முதலமைச்சர், அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட ஆளுநர்!

புதுச்சேரியில் தேசிய இளைஞர் விழா நடத்துவது பற்றி முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அதிகாரிகளுடன் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

தேசிய இளைஞர் விழா : முதலமைச்சர், அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட ஆளுநர்!

ThangaveluBy : Thangavelu

  |  22 Dec 2021 8:28 AM GMT

புதுச்சேரியில் தேசிய இளைஞர் விழா நடத்துவது பற்றி முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அதிகாரிகளுடன் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

தேசிய இளைஞர் விழா அடுத்த ஆண்டு ஜனவரி 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடியும் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் கொரோனா தொற்று பரவல் ஒரு புறம் இருப்பதால் அதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த விழாவுக்கு ஆளுநர் தமிழிசை தலைமை வகித்தார். இதில் முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தர் மோகன், ஏ.டி.ஜி.பி. ஆனந்தமோகன் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர்.

Source, Image Courtesy: Daily Thanthi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News