Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரிக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!

புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகின்ற நிலையில் காற்றழுத்த தாழ்வு நிலையால் அடிக்கடி கனமழை பெய்து வருகிறது.

புதுச்சேரிக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!

ThangaveluBy : Thangavelu

  |  27 Nov 2021 6:20 AM GMT

புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகின்ற நிலையில் காற்றழுத்த தாழ்வு நிலையால் அடிக்கடி கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் புதுச்சேரியில் நேற்று முன்தினம் இரவு முதல் மீண்டும் மழை பெய்து வருகிறது. மேலும், நேற்று காலையில் திடீரென்று சிறிது நேரம் கனமழை பெய்தது. அதன் பின்னர் லேசான மழை பெய்து வருகிறது.

அது மட்டுமின்றி இரவு 8 மணியில் இருந்து 10 மணி வரை இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து பெய்யும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தொடர்ந்து கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழையை எதிர்கொள்ள புதுச்சேரி அரசு தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளது. கனமழை பெய்யும் நிலையில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவம்பர் 27) விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

Source: Daily Thanthi

Image Courtesy: News 18


Next Story
கதிர் தொகுப்பு
Trending News