Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி: சர்வதேச சுகாதார மாநாடு முதலமைச்சர் துவக்கம்!

புதுச்சேரியில் சர்வதேச சுகாதார மாநாடு முதலமைச்சர் ரங்கசாமி துவங்கி வைத்தார்.

புதுச்சேரி: சர்வதேச சுகாதார மாநாடு முதலமைச்சர் துவக்கம்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  22 Jan 2023 2:33 AM GMT

புதுச்சேரி பிள்ளையார் குப்பத்தில் உள்ள ஸ்ரீ பாலாஜி வித்யா நகர் பல்கலைக்கழகம் சார்பில் இரண்டாவது சர்வதேச சுகாதார மற்றும் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டை முதலமைச்சர் ரங்கசாமி துவங்கி வைத்து இருக்கிறார். பல்கலைக்கழகத்தின் வேந்தர் ராஜகோபாலன் அவர்கள் முன்னதாக இந்த ஒரு நிகழ்ச்சி துவங்கி வைத்திருந்தார். இவ்விழாவில் முதலமைச்சர்கள் கலந்து கொண்டு விழாவை துவங்கி வைத்து விழா மலரை வெளியிட்டு இருக்கிறார். அப்பொழுது அவர் கூறுகையில், புதுச்சேரி மாநிலத்தில் தற்போது இதுபோன்ற மாநாடு நடத்தப்படுவது மிகவும் பெருமையாக இருப்பதாக கூறியிருக்கிறார்.


மேலும் சிறிய மாநிலத்தில் உலக அளவில் தலைசிறந்த டாக்டர்கள் உருவாகி வருவது நம்முடைய பெருமை என்று குறிப்பிட்டார். மேலும் மகாத்மா காந்தி மருத்துவமனையில் சிறந்த டாக்டர்களை உருவாக்கிக் கொண்டிருப்பது பாராட்டுக்குரிய ஒரு செயலாகும். மருத்துவத்துறை வளர்ச்சிக்கு அரசு எப்பொழுதும் உறுதியாக இருக்கும் அவர் என்று நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார். குறிப்பாக இந்த ஒரு மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இயக்குனர் டாக்டர் நித்திய செய்த கலந்து கொண்டு மத்திய அரசு திட்டங்கள் குறித்து பேசுகிறார்.


மேலும் பல்கலைக்கழக துணைவேந்த சுபாஷ் சந்திரபரிசா சர்வதேச சுகாதார மற்றும் ஆராய்ச்சி மாநாட்டின் நோக்கம் குறித்து பேசி இருக்கிறார். மேலும் பல்கலைக்கழக பொது மேலாளர் ஆஷா சிறப்பு விருந்தினர்களின் கவுரவித்து இருக்கிறார். இந்த மாநாட்டில் 50க்கும் மேற்பட்ட கருத்துரகங்கள் நடைபெற இருக்கிறது 250 தேசிய வல்லுனர்கள் பல்வேறு தரப்புகளில் இன்னும் மாநாடுகளில் பேசுகிறார்கள்.

Input & Image courtesy: Thanthi News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News