Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி: ஐ.பி.எல் தொடர் போட்டிகள் பிரம்மாண்டமான டிஜிட்டல் திரையில்...

பிரமாண்ட திரையில் கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது.

புதுச்சேரி: ஐ.பி.எல் தொடர் போட்டிகள் பிரம்மாண்டமான டிஜிட்டல் திரையில்...

Bharathi LathaBy : Bharathi Latha

  |  23 April 2023 5:24 AM GMT

புதுச்சேரியில் உள்ள மக்களுக்காக டிஜிட்டல் திரையில் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர்கள் ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன. புதுவை உப்பளம் விளையாட்டு மைதானத்தில் பிரமாண்ட திரை அமைத்து கிரிக்கெட் போட்டியை நேரடியாக ஒளிபரப்ப ஐ.பி.எல். பேன் பார்க் என்ற அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. இது புதுச்சேரி மக்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.


மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த ஒரு டிஜிட்டல் திரை அனுபவத்தை பெற இருக்கிறார்கள். அதன்படி, ஞாயிற்றுக்கிழமை நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. நாளை மாலை 3.30 மணிக்கு லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்-குஜராத் டைட்டன்ஸ் மற்றும் இரவு 7.30 மணிக்கு மும்பை இந்தியன்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதும் போட்டிகளும், நாளை மறுநாள் 3.30 மணிக்கு பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் போட்டிகள் அகன்ற திரையில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.


இதனை கிரிக்கெட் ரசிகர்கள் இலவசமாகவே கண்டுகளிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு முன் கந்து உற்சாகம் அளிக்கும் தகவலாக இது அமைந்து இருக்கிறது. குறிப்பாக பெரும்பாலான ரசிகர்கள் குறிப்பாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஒரு இடத்தில் ஒன்றாக கூடி இத்தகைய ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கக் கூடியது தான்.

Input & Image courtesy: Samayam

Next Story
கதிர் தொகுப்பு
Trending News