Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி: ஜிப்மர் கட்டண சலுகையை அரசியல் ஆக்குவதா.. கவர்னர் தமிழிசை ஆதங்கம்..

புதுச்சேரியில் ஜிம்பர் கட்டண சலுகை அரசியல் ஆக்குவதை கண்டித்து கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் தன்னுடைய ஆதங்கத்தை தெரிவித்து இருக்கிறார்.

புதுச்சேரி: ஜிப்மர் கட்டண சலுகையை அரசியல் ஆக்குவதா.. கவர்னர் தமிழிசை ஆதங்கம்..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  4 May 2023 2:59 AM GMT

புதுச்சேரியில் உள்ள அரசின் சுகாதாரம், செய்தி, கல்வித்துறை இணைந்து 3 நாள் சுகாதார திருவிழாவை காமராஜர் மணிமண்டபத்தில் நடத்துகிறது. இந்த நிகழ்ச்சியின் போது புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருந்தார். குறிப்பாக இந்த விழாவை தொடங்கி வைப்பதற்கு வைத்த பிறகு செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்து இருக்கிறார். அந்த பேட்டியின் போது அவருக்கு ஒரு கையில் ஜிம்பர் மருத்துவமனை வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு சிறப்பான ஒரு சுகாதார நடவடிக்கைகளை உறுதி செய்து இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.


ஜிப்மர் மருத்துவமனை வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு முற்றிலுமாக இலவச சிகிச்சை அளித்து வருகிறது. பல்வேறு நபர்கள் இந்த ஒரு இலவச சிகிச்சைகள் மூலமாக பயனடைந்து வருகிறார்கள். நம்மிடம் பல நோய்கள் அதிகரித்து இருக்கிறது. நம்முடைய உடல் நலமாக இருக்கிறதா? என்பதை நாம் பரிசோதனை செய்து கொண்டு உரிய முறையில் அவற்றை பராமரிக்க வேண்டும். குறிப்பாக வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இதுபோன்ற ஜிம்பர் மருத்துவமனை மிகவும் உதவியாக இருக்கிறது.


புற்றுநோய் ஆரம்பத்திலேயே வந்தால் சரி செய்து விடலாம். ஜிப்மர் மருத்துவமனை வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு முற்றிலுமாக இலவச சிகிச்சை அளித்து வருகிறது. குறைந்த கட்டணத்தை வசூல் செய்யும் ஜிம்பர் மருத்துவமனை சலுகைகளை அரசியலாக்கப்படுவது மிகவும் வருத்தமான ஒரு செயலாகவே இருக்கிறது. உலகதரத்திற்கு புதுச்சேரியில் உள்ள சும்பர் மருத்துவமனை தரத்தை உயர்த்துவதற்கான முயற்சிகளை அரசாங்கம் செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

Input & Image courtesy: Maalaimalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News