Kathir News
Begin typing your search above and press return to search.

மழை நிவாரணம் கேட்டவரை கூலாக டீல் செய்த புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி!

முதலமைச்சர் ரங்கசாமியின் செல்போன் எண்ணுக்கு ஒருவர் பேசியுள்ளார். அதில் நான் காரைக்கால் பகுதியில் இருந்து பேசுகிறேன். மழை நிவாரணம் 5 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்தீர்கள். இன்னும் வரவில்லை எனக் கூறியுள்ளார்.

மழை நிவாரணம் கேட்டவரை கூலாக டீல் செய்த புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி!

ThangaveluBy : Thangavelu

  |  16 Dec 2021 9:14 AM GMT

புதுச்சேரியில் பெய்து வந்த மழையால் விவசாய நிலங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் பெருமளவு பாதிப்புக்கு உள்ளானது. இதனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 ஆயிரம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார். அந்த பணம் ஒரு சில நாட்களில் வழங்கப்படும் என சமீபத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் பேசியிருந்தார்.

இந்நிலையில், முதலமைச்சர் ரங்கசாமியின் செல்போன் எண்ணுக்கு ஒருவர் பேசியுள்ளார். அதில் நான் காரைக்கால் பகுதியில் இருந்து பேசுகிறேன். மழை நிவாரணம் 5 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்தீர்கள். இன்னும் வரவில்லை எனக் கூறியுள்ளார்.

அதற்கு பதில் அளித்த முதலமைச்சர் ரங்கசாமி, நான் மட்டும் ராஜா இல்லை. எனக்கு கீழ் அமைச்சர்கள் உள்ளனர். எனக்கும் மேலும் உள்ளனர். இது புதுச்சேரி அப்படித்தான் இருக்கும் என்று பதிலில் கூறியுள்ளார். இந்த ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புதுச்சேரி முதலமைச்சரை யார் எப்போது வேண்டுமானாலும் செல்போனில் தொடர்பு கொள்ளலாம். எளிமையாக இருப்பார். யாருடைய அழைப்பையும் தட்டிக்கழிக்க மாட்டார் என அவரது கட்சியை சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Daily Thanthi

Image Courtesy:The Hindu


Next Story
கதிர் தொகுப்பு
Trending News