Kathir News
Begin typing your search above and press return to search.

95 ஊர்க்காவல் படையினருக்கு பணிநிரந்தம் செய்த முதலமைச்சர் ரங்கசாமி!

95 ஊர்க்காவல் படையினருக்கு பணிநிரந்தம் செய்த முதலமைச்சர் ரங்கசாமி!

ThangaveluBy : Thangavelu

  |  21 May 2022 5:26 AM GMT

புதுச்சேரி ஊர்க்காவல் படையில் பணியாற்றும் 45 ஆண்கள், 50 பெண்கள் புதுவை அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத்துறையின் கீழ் பல்நோக்கு பணியாளர்கள்களாக பணிநிரந்தம் செய்து அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.

அவர்களுக்கு ஆணையை வழங்கும் நிகழ்ச்சி முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனி.ஜெயக்குமார் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், கே.எஸ்.பி.ரமேஷ், பாஸ்கர், நிர்வாக சீர்திருத்தத்துறையின் செயலாளர் அருண், சார்பு செயலாளர் கண்ணன் உள்ளிட்டோர்கள் பங்கேற்றனர்.

அப்போது 95 ஊர்காவலப் படையினருக்கு முதலமைச்சர் ரங்கசாமி பணி நியமனம் ஆணையை வழங்கினார். அனைவரும் முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

Source, Image Courtesy: Daily Thanthi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News