Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரியிலிருந்து விடைபெற்று கோவை சென்றார் கிரண்பேடி.!

புதுச்சேரியிலிருந்து விடைபெற்று கோவை சென்றார் கிரண்பேடி.!

புதுச்சேரியிலிருந்து விடைபெற்று கோவை சென்றார் கிரண்பேடி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  21 Feb 2021 5:54 PM GMT

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு ராஜ்நிவாஸில் கிரண்பேடி தங்கியிருந்த நிலையில், இன்று புதுச்சேரியில் இருந்து விடைபெற்றார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பணியாற்றி வந்த கிரண்பேடி கடந்த 16ம் தேதி அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதனையடுத்து அப்பொறுப்பிற்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட நிலையில் கடந்த 18ம் தேதி பதவியேற்றுக்கொண்டார்.

ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்றாலும், ஆளுநர் மாளிகையான ராஜ்நிவாஸில் விருந்தினர் மாளிகையில் கிரண்பேடி தங்கியிருந்தார். அவரது பொருட்கள் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், புதுச்சேரி ராஜ்நிவாஸிலிருந்து கிரண்பேடி விடைபெற்றார். கார் மூலம் கோவை செல்லும் அவர், ஈஷாவில் சத்குரு ஜக்கி வாசுதேவை சந்தித்து பேச உள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து அவர் கோவையில் இருந்து டெல்லிக்கு செல்கிறார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News