Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி: பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி... ஆளுநர் மாளிகையில் சிறப்பு ஏற்பாடு...

100-வது அத்தியாயத்தில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.

புதுச்சேரி: பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி... ஆளுநர் மாளிகையில் சிறப்பு ஏற்பாடு...

Bharathi LathaBy : Bharathi Latha

  |  1 May 2023 1:16 AM GMT

பிரதமர் நரேந்திர மோடி, 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 'மன் கி பாத்' எனப்படும் மனதின் குரல் நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் பல்வேறு துறை சார்ந்த சாதனையாளர்கள் மற்றும் தேசத்துக்கு பங்களித்த எளிய மக்களின் செயல்பாடுகள் குறித்து மிக விரிவாகப் பேசி வருகிறார். இதில் அதிகமுறை தமிழகத்தைச் சேர்ந்தவர்களைப் பிரதமர் சுட்டிக்காட்டிப் பேசியுள்ளார்.


அது மட்டுமின்றி தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம், தமிழ் பாரம்பரியத்தின் சிறப்புகள் பற்றியும் இந்த நிகழ்ச்சியின் மூலம் மிக அதிக அளவில் தமது கருத்துகளைப் பிரதமர் வெளிப்படுத்தியுள்ளார். தற்போது 100-வது அத்தியாயத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் பேசவுள்ள நிலையில், அதனைப் பெரிய அளவில் கொண்டாடி பிரபலப்படுத்த நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


புதுச்சேரியிலும், பிரதமரின் மனதின் குரல் உரையின் 100-வது அத்தியாதத்தைக் கேட்க துணை நிலை ஆளுநர் மாளிகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் முக்கியப் பிரமுகர்களுடன் இணைந்து பிரதமரின் உரையைக் கேட்கவுள்ளார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க அங்கும் பல்வேறு முக்கியப் பிரமுகர்கள், வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News