Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரியில் மத நல்லிணக்க பேரணி என்ற பெயரில் மக்களுக்கு இடையூறு செய்த இடதுசாரிகள்

தி.மு.க மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் நடத்தப்பட்ட மத நல்லிணக்க போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு.

புதுச்சேரியில் மத நல்லிணக்க பேரணி என்ற பெயரில் மக்களுக்கு இடையூறு செய்த இடதுசாரிகள்

Bharathi LathaBy : Bharathi Latha

  |  4 Oct 2022 5:05 AM GMT

புதுச்சேரி அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி முன்னிட்டு தி.மு.க மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. போராட்டம் பொதுமக்களுக்கு இடையூறு விளங்கும் வகையில் பெருமளவில் போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. அண்ணா சாலையுடன் காமராஜர் சாலை வரை நடந்த இப்போராட்டத்தின் காரணமாக போக்குவரத்து பெரும் அளவில் பாதிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.


மனித சங்கிலி போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் கட்சிக்காரர்களுக்கு இடையே பெரும் வாக்குவாதம் நிகழ்ந்தது. புதுச்சேரியில் மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டம் பெரும் பரபரப்பை அங்கு ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து பெரும் அளவில் பாதிக்கப்பட்டு இருப்பது வாகனம் ஓட்டிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மனித சங்கிலி போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு என பொதுமக்கள் வாக்குவாதம். பொதுமக்களுக்கு இடையூறும் விளைவுக்கும் இத்தகைய மனித சங்கிலி போராட்டங்கள் தேவையா? என்பது குறித்தும் இனிவரும் காலங்களில் யோசிக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கூறப்பட்டுள்ளது பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் மனித சங்கிலி போராட்டங்கள் நடைபெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Input & Image courtesy:Thanthi News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News