Kathir News
Begin typing your search above and press return to search.

ராஜினாமா கடிதத்தை துணை நிலை ஆளுநர் தமிழிசையிடம் அளித்த நாராயணசாமி.!

ராஜினாமா கடிதத்தை துணை நிலை ஆளுநர் தமிழிசையிடம் அளித்த நாராயணசாமி.!

ராஜினாமா கடிதத்தை துணை நிலை ஆளுநர் தமிழிசையிடம் அளித்த நாராயணசாமி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  22 Feb 2021 12:42 PM GMT

புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், முதலமைச்சராக நாராயணசாமி பொறுப்பு வகித்து வந்தார்.

புதுச்சேரியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனையடுத்து போதுமான பெரும்பான்மை இல்லாமல் நாராயணசாமி அரசு இருந்து வந்தது. இதனையடுத்து எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை தொடர்ந்து இன்று பெரும்பான்மையை நிரூபிக்க புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சட்டப்பேரவைக்கு வந்தார். அப்போது போதுமான உறுப்பினர்களின் ஆதரவு அரசுக்கு இல்லை என்பதால் பெரும்பான்மை இழந்து விட்டது என சபாநாயகர் அறிவித்தார்.

இந்நிலையில், தன்னுடைய ராஜினாமா கடிதத்தை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜனிடம் கொடுத்தார் நாராயணசாமி. இதன் பின்னர் அவரது காரில் இருந்த தேசியக்கொடியும் அகற்றப்பட்டது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News