Kathir News
Begin typing your search above and press return to search.

ராகுலிடம் பொய்சொல்லி ஏமாற்றியவர்தான் நாராயணசாமி.. புதுவையில் பிரதமர் மோடி பேச்சு.!

ராகுலிடம் பொய்சொல்லி ஏமாற்றியவர்தான் நாராயணசாமி.. புதுவையில் பிரதமர் மோடி பேச்சு.!

ராகுலிடம் பொய்சொல்லி ஏமாற்றியவர்தான் நாராயணசாமி.. புதுவையில் பிரதமர் மோடி பேச்சு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  25 Feb 2021 1:32 PM GMT

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியிடம் பொய்யாக மாற்றி மொழிப்பெயர்த்து ஏமாற்றியவர்தான் நாராயணசாமி என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.

கடந்த வாரம் புதுச்சேரிக்கு காங்கிரஸ் தலைவரும் எம்.பி.யுமான ராகுல்காந்தி வருகை தந்தார். அப்போது மீனவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது புயலின்போது முதலமைச்சர் நாராயணசாமி இந்த பக்கமே வரவில்லை என்று மீனவ பெண் ஒருவர் ராகுலிடம் புகாராக தெரிவித்தார். அப்போது மொழிப்பெயர்த்து சொல்லும்போது நாராயணசாமி ராகுலிடம் மாற்றி கூறினார். அதாவது நான் புயல் வந்தபோது மக்களை சென்று சந்தித்தேன் அதனைதான் அவர் தெரிவிக்கிறார் என கூறினார்.

அன்றைய தினமே சமூக வலைதளங்களில் மிகவும் வைரலானது. ராகுலிடமே பொய் சொல்லி ஏமாற்றும் நாராயணசாமி மக்களிடம் எவ்வளவு பொய் சொல்லிக்கொண்டு இருந்திருப்பார் என சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு ஆளானார்.

இந்நிலையில், இன்று புதுச்சேரியில் பிரதமர் மோடி புதிய திட்டங்களை தொடங்கி வைத்து பேசினார். அப்போது, “பொய் சொல்வதில் அனைத்து பதக்கங்களையும் பெற்றவர்கள்தான் காங்கிரஸ் கட்சியினர். மீனவ பெண் தெரிவித்த புகாரை தவறாக மொழிப்பெயர்த்து ராகுலிடம் ஏமாற்றியவர்தான் நாராயணசாமி. பரம்பரை அரசியல் தற்போது நாடு முழுவதும் முடிவுக்கு வருகிறது. விரைவில் புதுச்சேரி மக்கள் நல்ல ஆட்சியின் காற்றை சுவாசிப்பார்கள் எனக் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News