Kathir News
Begin typing your search above and press return to search.

தோல்வி மேல் தோல்வி! அரசியலில் நாராயணசாமி தலையிடக்கூடாது: 42 நிர்வாகிகள் தலைமைக்கு கடிதம்!

தோல்வி மேல் தோல்வி! அரசியலில் நாராயணசாமி தலையிடக்கூடாது: 42 நிர்வாகிகள் தலைமைக்கு கடிதம்!

ThangaveluBy : Thangavelu

  |  7 July 2022 10:50 AM GMT

புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவரை மாற்ற வேண்டும் எனவும், புதுச்சேரி அரசியலில் நாராயணசாமி தலையிடக்கூடாது என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் ராகுல்காந்திக்கு கடிதம் அனுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டியை சேர்ந்த 42 நிர்வாகிகள் கையெழுத்திட்டு ராகுல்காந்திக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அவர்கள் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி மாநிலத்தில் தோல்வி மேல் தோல்வி, இதனால் கட்சி மிகவும் மோசமான நிலையில் தள்ளப்பட்டுள்ளது.

புதுவை மண் எப்போதும் காங்கிரஸ் கோட்டையாகும். ஆனால் கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 30 தொகுதியில் வெறும் இரண்டு இடத்தில் வெற்றி பெற்றுள்ளோம். எனவே தோல்விக்கு முழுக்காரணம் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், வைத்திலிங்கள் எம்.பி., உள்ளிட்டோர் மிக முக்கிய காரணமாகும்.

தேர்தல் தோல்வியை தொடர்ந்து கடந்த 2021ம் ஆண்டு தினேஷ்குண்டுராவ், உத்தவ் ரெட்டி உள்ளிட்டோர் புதுவையில் ஆராய அனுப்பினார்கள். இக்குழு காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியத்தை மாற்ற வேண்டும் எனவும் தலைமைக்கு கூறியது. ஆனால் இதுவரையில் அவர் மாற்றப்படவில்லை. எனவே வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னரே இவரை மாற்ற வேண்டும். அப்போதுதான் வெற்றிபெற முடியும்.

மேலும், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமியும் தொண்டர்களின் நம்பிக்கையை இழந்து விட்டார். அவரையும் புதுவை அரசியலில் தலையிட அனுமதிக்கக்கூடாது. அப்போதுதான் வருகின்ற தேர்தலில் வெற்றி பெற முடியும். இவ்வாறு அவர்கள் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Daily Thanthi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News