Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி தொழில்நுட்பக் கல்லூரியில் புதிய கட்டுமானப் பணிகளை தொடங்கிய முதலமைச்சர் ரங்கசாமி!

புதுச்சேரி தொழில்நுட்பக் கல்லூரியில் புதிய கட்டுமானப் பணிகளை தொடங்கிய முதலமைச்சர் ரங்கசாமி!

ThangaveluBy : Thangavelu

  |  14 July 2022 2:08 PM GMT

புதிய கட்டுமான பணிகளுக்கான தொடக்க விழாவில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார்.

காரைக்கால் மாவட்டம், திருவேட்டக்குடியில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் 115 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய கட்டிடங்களுக்கான கட்டுமான பணிகள் தொடங்குவதற்கான விழா நேற்று (ஜூலை 13) நடைபெற்றது.

இதில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். அதனை முடித்துக்கொண்டு புதிதாக அமைக்கப்பட உள்ள மாணவிகள் விடுதி கட்டிட விரிவாக்கம், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் குடியிருப்பு வளாகம், தியான்சந்த் உள்விளையாட்டு மைதானம் உள்ளிட்டவைகளை தமிழிசை சவுந்தரராஜன் துவக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Daily Thanthi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News