Kathir News
Begin typing your search above and press return to search.

காவலர் பணி: நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு!

புதுச்சேரியில் காவலர் பணியிட தேர்வுக்கு நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது என்று போலீஸ் டிஜஜி கூறியுள்ளார்.

காவலர் பணி: நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு!

ThangaveluBy : Thangavelu

  |  7 Dec 2021 6:36 AM GMT

புதுச்சேரியில் காவலர் பணியிட தேர்வுக்கு நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது என்று போலீஸ் டிஜஜி கூறியுள்ளார்.

இது பற்றி டிஜிஜி மிலிந்த் தும்ப்ரே, எஸ்.பி., பிரதிக்ஷா கோத்ரா உள்ளிட்டோர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரி காவல்துறையில் 390 காவலர்கள், 12 ரேடியோ டெக்னிஷியன்கள், 20 டெக் ஹேண்டலர்ஸ் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இது போன்று மொத்தம் 17,225 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 14,766 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டது. இதனிடையே தகுதி வாய்ந்தவர்களுக்கு உடல் திறன் தேர்வு ஆன்லைன் மூலம் அனுப்பப்பட்டது. ஆனால் 31.10.2020 தேர்வுகள் மறு உத்தரவு வரும்வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்நிலையில், தகுதி வாய்ந்தவர்களுக்கு ரேடியோ பிரிகொயின்சி ஐடென்டிபிகேஷன் கருவி, சிப் டைமிங் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வருகின்ற ஜனவரி மாதம் 3வது வாரத்தில் உடல் தகுதி தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. எனவே நிராகரிக்கப்பட்ட 2,459 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. எனவே விண்ணப்பதாரர்கள் உரிய சான்றிதழ்களை கோரிமேட்டில் உள்ள காவலர் ஆட்சேர்ப்பு பிரிவு போலீஸ் எஸ்.பி.,யிடம் இன்று (டிசம்பர் 7 முதல் 16ம் தேதி) வரை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை சமர்ப்பிக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Source: Daily Thanthi

Image Courtesy: India Today


Next Story
கதிர் தொகுப்பு
Trending News