Kathir News
Begin typing your search above and press return to search.

ரூ.2 கோடியே 24 லட்சத்தை மானியமாக பெற்ற புதுச்சேரி.. பயனடைய காத்திருக்கும் விவசாயிகள்..

ரூபாய் இரண்டு கோடியே 24 லட்சத்தை வேளாண் துறை சார்பில் மானியமாக புதுச்சேரிக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.

ரூ.2 கோடியே 24 லட்சத்தை மானியமாக பெற்ற புதுச்சேரி.. பயனடைய காத்திருக்கும் விவசாயிகள்..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  17 Jun 2023 4:42 AM GMT

புதுச்சேரி சார்பில் தற்போது முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. மத்திய அரசிடம் இருந்து அதற்கான மானிய தொகையை புதுச்சேரி அரசாங்கம் பெற்று இருக்கிறது. வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையில் சார்பில் விவசாயிகளுக்கு தேவையான டிராக்டர், பவர் டில்லர், நெல் நடவு எந்திரம், களையெடுக்கும் எந்திரம் மற்றும் மேம்படுத்தப்பட்ட உபகரணங்களை வாங்க மானிய தொகை வழங்கப்படுகிறது. இதற்காக மத்திய அரசிடம் இருந்து ரூ.2 கோடியே 24 லட்சம் பெறப்பட்டுள்ளது.


இந்த திட்டத்தில் பயன் பெறும் 10 விவசாயிகளுக்கு ஏற்கனவே வேளாண் உபகரணங்கள் வாங்க ஆணை வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் 10 பேருக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தனது அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆணைகளை வழங்கினார். அப்போது வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், இயக்குனர் பாலகாந்தி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.


மேலும் பயனடையும் இருக்கும் விவசாயிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சி இதனால் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் மத்திய அரசிடம் இருந்து விவசாயிகளுக்கு வர வேண்டிய மானிய தொகை உரிய சமயத்தில் தங்கள் பெற்று விடுவதன் காரணமாக விவசாயிகள் தங்களுடைய நன்றிகளை பதிவு செய்து இருக்கிறார்கள்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News