Kathir News
Begin typing your search above and press return to search.

ஆன்மீகத்துடன் சுதந்திர வேட்கை கொடுத்தவர் அரவிந்தர்: பிரதமர் மோடி புகழாரம்!

ஆன்மீகத்துடன் சேர்ந்து சுதந்திர வீட்டையும் உருவாக்கியவர் ஸ்ரீ அரவிந்தர் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டி இருக்கிறார்.

ஆன்மீகத்துடன் சுதந்திர வேட்கை கொடுத்தவர் அரவிந்தர்: பிரதமர் மோடி புகழாரம்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  15 Dec 2022 5:34 AM GMT

ஆன்மிக சக்தியுடன், சுதந்திர வேட்கையும் உருவாக்கி இந்தியாவை தலை நிமிர செய்தவர் ஸ்ரீ அரவிந்தர் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். ஸ்ரீ அரவிந்தர் 150 வது பிறந்தநாள் தினத்தை ஒட்டி புதுச்சேரி கம்பன் கவியரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொளி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்பொழுது அரவிந்தரின் நினைவாக நாணயம் மற்றும் அஞ்சல் தலைகீழ் வெளியிட்டு பெருமை சேர்த்தார்.


மேலும் புதுச்சேரியில் வாழ்ந்த அரவிந்தரின் நினைவில் போற்றும் வகையில் நினைவு நாணயமும் அஞ்சல் தலையும் வெளியிடப் பட்டிருக்கிறது. நாட்டில் ஒரு புதிய சக்தி இது போன்ற நிகழ்ச்சிகள் அளிக்கும் அரவிந்தரின் யோகி சக்தி என்பது சமூக சக்தி என்பது மட்டுமல்ல அது அனைவரின் இணைக்கும் சக்தியாகும் என்று கூறியிருக்கிறார். 1893 ஆம் ஆண்டில் ஒற்றுமையான நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அந்த ஆண்டில் தான் சுவாமி விவேகானந்தர் சிகாகோ ஆன்மீக உரையாற்றினார். அதே ஆண்டில் தான் மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்க அவருக்கு சென்று போராடி சாதனை படைத்தார். அரவிந்தரும், பிரிட்டனில் படிப்பை முடித்துக்கொண்டு 1893 ஆம் ஆண்டில் தான் இந்தியாவிற்கு திரும்பினார். அதன்படி 1993 ஆம் ஆண்டு இந்தியாவிற்கும் உந்துதலை அமைந்தது அனைவரையும் ஒன்றிணைக்கும் தேசபக்தியாக அரவிந்தர் திகழ்ந்தார்.


அவர் வங்காளத்தில் பிறந்திருந்தாலும் குஜராத்தி, வங்காளம் என பல்வேறு மொழிகளை கற்றுக் கொண்டவர். பிற மொழிகளிலும் தனது தாய்மொழி போல நேசித்தவர். புதுச்சேரியில் தான் அவர் தனது வாழ்நாளில் அதிக நாட்களை கழித்திருந்தார். காசி தமிழ் சங்க நிகழ்ச்சியில் பங்கேற்ற பொழுது இன்றைய இளைஞர்கள் என்ன விரும்புகிறார்கள்? என்பது பற்றி அறிய வாய்ப்பு கிடைத்தது. அதன்படி மொழி பெயரால் அரசியலில் ஈடுபடுவதை அவர்கள் விரும்புவது இல்லை என்று தெரிய வந்தது. அரவிந்தர் தனித்துவ அரசியல் ஞானி ஆகவும், ஆன்மீக சக்தியாகவும் வழங்கினார். தேசத்தின் விடுதலைக்காக மட்டும் அவர் பாடுபடவில்லை, ஆன்மிக சக்தி உயர்வும் அவர் பாடுபட்டார் என்று பிரதமர் குறிப்பிட்டிருக்கிறார்.

Input & Image courtesy: Nakkheeran News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News