Kathir News
Begin typing your search above and press return to search.

வெளிநாட்டில் வேலை! 179 பேரிடம் ஒரு கோடியே 65 லட்சம் பெற்று மோசடி செய்த 6 பேர் மீது வழக்கு!

வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பதாக கூறி 179 நபர்களிடம் ரூ.1.65 கோடி மோசடி செய்ததாக பெண் உட்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

வெளிநாட்டில் வேலை! 179 பேரிடம் ஒரு கோடியே 65 லட்சம் பெற்று மோசடி செய்த 6 பேர் மீது வழக்கு!

ThangaveluBy : Thangavelu

  |  30 Dec 2021 12:28 PM GMT

வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பதாக கூறி 179 நபர்களிடம் ரூ.1.65 கோடி மோசடி செய்ததாக பெண் உட்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. புதுச்சேரி எல்லைப் பிள்ளைசாவடி பாலதண்டாயுதம் தெருவை சேர்ந்தவர் ஸ்டீபன் நித்தியானந்தம் 57, இவர் சர்ச்சில் பாதராக உள்ளார். இதனிடையே கடந்த 2018ம் ஆண்டு இவருக்கு ஜான்சன், சைமன் ஜோஸ்வா என்பவர்கள் அறிமுகம் ஆகியுள்ளனர். அவர்கள் தங்களுக்கு வெளிநாடுகளில் ஆட்கள் இருக்கின்றனர். அவர்கள் மூலம் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பதாகவும் அதற்கு பணம் செலவாகும் எனவும் கூறியுள்ளனர்.

இதனை உண்மை என நம்பி, ஸ்டீபன் நித்யானந்தம் தனக்கு தெரிந்த 179 பேர்களிடம் ஒரு கோடியே 65 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இதனை ரமணி அனுப்பிய 35 வங்கிக்கணக்குகளில் பணத்தை செலுத்தியுள்ளார் ஸ்டீபன். ஆனால் பணம் செலுத்தியபடி வேலை வாங்கிக்கொடுக்கவில்லை, பணத்தை கேட்டாலும் தராமல் இழுத்தடித்துள்ளனர்.

இதனால் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் ஸ்டீபனிடம் கூறியுள்ளனர். இதனால் ஸ்டீபன் ரமணி மற்றும் ஜான்சனிடம் பணத்தை கேட்டபோது எந்த பதிலும் இல்லை என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ஸ்டீபன் சிபிசிஐடி போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் ரமணி, ஜான்சன், சைமன் ஜோஸ்வா மற்றும் கிருஷ்ணவேணி, தமிழ்செல்வன், நிக்கோலஸ் உள்ளிட்ட 6 பேர் மீது பண மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Source: Daily Thanthi

Image Courtesy:Business Standard

Next Story
கதிர் தொகுப்பு
Trending News