கஞ்சாவை களையெடுக்க களமிறங்கிய புதுச்சேரி ஐ.ஜி சந்திரன்!
![கஞ்சாவை களையெடுக்க களமிறங்கிய புதுச்சேரி ஐ.ஜி சந்திரன்! கஞ்சாவை களையெடுக்க களமிறங்கிய புதுச்சேரி ஐ.ஜி சந்திரன்!](https://kathir.news/h-upload/2022/05/05/1357102--.webp)
கஞ்சா விற்கும் நபர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுச்சேரி போலீஸ் ஐ.ஜி. சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். புதுச்சேரியில் மொத்தமாக கஞ்சாவை ஒழித்துக்கட்டுவதற்காக போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு மத்தியில் கஞ்சா மற்றும் பிற போதைப் பொருட்கள் புழக்கத்தை எப்படி தடுப்பது என்று உயர் அதிகாரிகள் தலைமையில் ஆலோசனை கூட்டம் காவல்துறை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு ஐ.ஜி. சந்திரன் தலைமை வகித்தார். இதில் எஸ்.பி. ஜிந்தா கோதண்டராமன், இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், கார்த்திகேயன் மற்றும் பல போலீசார் பங்கேற்றனர். அதன் பின்னர் ஐ.ஜி. சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
புதுவையில் போதைப் பொருட்கள் விற்பனையை போலீசார் துரிதமாக செயல்பட்டு தடுத்து நிறுத்த வேண்டும். அதிலும் கஞ்சா விற்கும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஐ.ஜி. பேசினார்.
Source, Image Courtesy: Daily Thanthi