Begin typing your search above and press return to search.
போலீசார் மற்றும் வியாபாரிகள் இடையே நல்லுறவு கூட்டம்!

By :
உருளையன்கோட்டை காவல் நிலையத்தில் போலீசார் மற்றும் வியாபாரிகள் இடையே நல்லுறவு கூட்டம் கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு வம்சிதரரெட்டி தலைமையில் நடைபெற்றது. இதில் உருளையன்பேட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாபுஜி, எஸ்.ஐ. சந்திரசேகரன் உட்பட வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய போலீஸ் அதிகாரி, புதிய பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அனுமதி பெறாமல் இரவு நேரங்களில் மதுபானம் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்வதை தடுப்பதற்கான ஆலோசனையும் வழங்கப்பட்டது.
Source, Image Courtesy: Daily Thanthi
Next Story