Kathir News
Begin typing your search above and press return to search.

தீப்பிடித்து எரிந்த அரசு பேருந்து. பயணிகளின் நிலை என்ன ? ஒரே பரபரப்பு !

சாலையில் அரசுப் பேருந்து ஒன்று திடீரென்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தீப்பிடித்து எரிந்த  அரசு பேருந்து. பயணிகளின் நிலை என்ன ?  ஒரே பரபரப்பு !

ThangaveluBy : Thangavelu

  |  6 Aug 2021 6:30 AM GMT

சாலையில் அரசுப் பேருந்து ஒன்று திடீரென்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறையில் இருந்து காரைக்கால் நோக்கி புதுச்சேரி மாநில அரசுக்கு சொந்தமான பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து பொறையாறு ராஜீவ் காந்தி சிலை அருகில் சென்றபோது திடீரென்று பேருந்தின் முன்பக்கத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது.


இதனால் சில நிமிடங்களிலேயே பேருந்தின் முன்பக்கம் தீப்பிடித்து எரிந்தது. இதனால் ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தினார். அப்போது பதற்றமாக இருந்த பயணிகள் அலறியபடி பேருந்தில் இருந்து கீழே இறங்கி சாலையில் தஞ்சமடைந்தனர்.

அதற்குள்ளாக பேருந்து முழுவதும் தீப்பிடித்தது. இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். இந்த விபத்தால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால் அந்த சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் ஆங்காங்கே வாகனத்தை நிறுத்தியதால் பரபரப்பாக காணப்பட்டது.

Source: News 7

Image Courtesy: News 7 Tamil

https://news7tamil.live/a-govt-bus-caught-fire-near-poraiyaru.html

Next Story
கதிர் தொகுப்பு
Trending News