Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரியில் நாளை திறக்கப்படவிருந்த பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு தள்ளி வைப்பு.!

நாளை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்ற அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று திறப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது எனக்கூறியுள்ளார்.

புதுச்சேரியில் நாளை திறக்கப்படவிருந்த பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு தள்ளி வைப்பு.!

ThangaveluBy : Thangavelu

  |  15 July 2021 9:28 AM GMT

புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து பள்ளிகள், கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி மூடப்பட்டது. அரசு எடுத்த கடுமையான நடவடிக்கையால் தற்போது தொற்று குறைந்து வருகிறது. இதனையடுத்து பள்ளிகளை திறக்க புதுச்சேரி அரசு முடிவு செய்திருந்தது. இதன்படி நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார்.

இதற்காக பள்ளிகளில் வகுப்பறைகளை சுத்தம் செய்யவும், மற்றும் இடைவெளியை விட்டு மாணவர்கள் அமர்வதற்கு மேஜைகளை ஏற்றார் போன்று மாற்றுவதற்கும் உத்தரவு பிறப்பித்திருந்தார்.


இந்நிலையில், புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுடன் ஆலோசனை நடத்திய பின்னர் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: புதுச்சேரியில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு தள்ளிவைக்கப்படுகிறது. பள்ளிகள், கல்லூரிகள் திறக்கும் சூழல் வருகின்றபோது மீண்டும் திறக்கப்படும்.

மேலும், நாளை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்ற அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று திறப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது எனக்கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News