Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி: ஆதரவற்ற குழந்தைகளுடன் கோலாகலமாக பிறந்த நாளை கொண்டாடிய சபாநாயகர்

புதுச்சேரியில் அமைந்துள்ள குழந்தைகள் காப்பகத்தில் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார் சபாநாயகர் செல்வம்.

புதுச்சேரி: ஆதரவற்ற குழந்தைகளுடன் கோலாகலமாக பிறந்த நாளை கொண்டாடிய சபாநாயகர்

Bharathi LathaBy : Bharathi Latha

  |  14 Nov 2022 9:45 AM GMT

புதுச்சேரி சபாநாயகர் ஏம்பலம் திரு.செல்வம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் சிறப்பு அழைப்பாளரும், ஆர்.எஸ்.எஸ்- இன் மூத்த காரியகர்த்தருமான திரு.லட்சுமி நாராயணன் அவர்களின் தலைமையில் புதுச்சேரி ரயில் நிலையம் அருகில் உள்ள சந்தோஷ் நண்பன் குழந்தைகள் காப்பகத்தில் இன்று மதிய உணவு வழங்கப்பட்டு மரக்கன்று நடப்பட்டது. புதுச்சேரி சபாநாயகர் ஏம்பலம் திரு.செல்வம் அவர்கள் தனது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக புதுச்சேரி ரயில் நிலையம் அருகில் உள்ள சந்தோஷ் நண்பன் குழந்தைகள் காப்பகத்தில் மரக்கன்று நட்டார்.


இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர் ரத்தினவேல் லட்சுமிணசாமி, ஆடிட்டர் ராமஜெயம், தேவேந்திர குமார் கோபி, ஓம் சக்தி ரமேஷ் மாநில இளைஞர் அணி செயற்குழு உறுப்பினர் செல்வம் என்கிற சதீஷ் உழவரை மாட்ட பா.ஜ.க பிரமுகர் ராமச்சந்திரன்,சிவராஜ், பி.ஆர்.டி.சி ரமேஷ், உருளையன்பேட்டை பா.ஜ.க பிரமுகர் ராபர்ட் மற்றும் மதன்குமார் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


மாண்புமிகு புதுச்சேரி சபாநாயகர் ஏம்பலம் திரு.செல்வம் அவர்களின் பிறந்தநாள் புதுச்சேரி ரயில் நிலையம் அருகில் உள்ள சந்தோஷ் நண்பன் குழந்தைகள் காப்பகத்தில் கொண்டாடப்பட்டது. இந்த காப்பகத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் ஒரு நாள் முழு உணவுகளை வழங்கப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy:



Next Story
கதிர் தொகுப்பு
Trending News