Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி: விரைவில் தொடங்கும் வணிக திருவிழா 2½ கோடி பரிசு!

புதுச்சேரியில் ஜனவரி 5ஆம் தேதி தொடங்கும் வணிகத் திருவிழா.

புதுச்சேரி: விரைவில் தொடங்கும் வணிக திருவிழா 2½ கோடி பரிசு!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  29 Dec 2022 12:51 AM GMT

புதுச்சேரியில் வணிகத் திருவிழா ஐந்தாம் தேதி துவங்குவதாகவும் இந்த திருவிழாவில் சுமார் இரண்டரை கோடி பரிசு வழங்குவது என்று முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடத்தப்பட்ட கூட்டத்தில் தற்பொழுது முக்கிய முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. உயர் மட்ட கூட்டம் புதுவை அரசின் சுற்றுலாத்துறை சார்பில் வணிக திருவிழா ஜனவரி 5ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 20ஆம் தேதி வரை நடத்த தற்போது வரை திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக வணிக திருவிழாவின் முதலாவது உயர்மட்டக்குழு கூட்டம் புதுவை வர்த்தக சபையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார்.


இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் தலைமை தாங்க சுற்றுலாத் துறை அமைச்சர் வர்த்தக சபை தலைவர் போன்ற பல்வேறு நபர்கள் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள் இந்த கூட்டத்தில் முக்கிய சில முடிவுகள் தற்போது எடுக்கப்பட்டு இருக்கிறது குறிப்பாக வணிக திருவிழா வருகின்ற ஒன்றினை மாதம் நடைபெற இருப்பதாகவும் பரிசு குப்பம் விலை ஒன்றின் ரூபாய் 10 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த வணிக திருவிழாவை பரிசு தொகையாக இரண்டரை கோடி பரிசு தொகை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. விழாவில் பம்பர் பரிசாக ஒருவருக்கு 75 சவரன் தங்க நாணயம், முதல் பரிசாக ரூ.5 லட்சம் மதிப்புள்ள 20 கார்கள், 2-வது பரிசாக ரூ.90 ஆயிரம் மதிப்புள்ள 40 ஸ்கூட்டர்கள், 3-வது பரிசாக ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள 200 செல்போன்கள்.


4-வது பரிசாக ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள சமையலறை பொருட்களை 2 ஆயிரம் பேருக்கு வழங்குவது, ஆறுதல் பரிசாக ரூ.1,000 மதிப்புள்ள பொருட்களை 20 ஆயிரம் பேருக்கு வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. பரிசு பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.2½ கோடி ஆகும். கூட்டத்தில் கலந்துகொண்ட வியாபாரிகள் போக்குவரத்து நெரிசல், வாகன நிறுத்துமிடங்கள் தொடர்பாக தங்களது குறைகளை தெரிவித்தனர்.

Input & Image courtesy: Thanthi News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News