Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரியில் ஆசிரியையிடம் கத்தி காண்பித்து நகை பறித்த 2 பேர் கைது!

புதுச்சேரியில் வாடகைக்கு வீடு கேட்பது போன்று நடித்து ஆசிரியையிடம் கத்தியை காண்பித்து நகை பறித்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுச்சேரியில் ஆசிரியையிடம் கத்தி காண்பித்து நகை பறித்த 2 பேர் கைது!

ThangaveluBy : Thangavelu

  |  17 Dec 2021 8:08 AM GMT

புதுச்சேரியில் வாடகைக்கு வீடு கேட்பது போன்று நடித்து ஆசிரியையிடம் கத்தியை காண்பித்து நகை பறித்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ரெட்டியார்பாளையம் 4வது சாலையை சேர்ந்தவர் வின்னி பிரிசில்லா 50, இவர் தனியார் பள்ளி ஆசிரியை ஆவார். இவரது வீட்டுக்கு கடந்த மாதம் 16ம் தேதி வாடகைக்கு வீடு பார்ப்பது போன்று 2 மர்ம ஆசாமிகள் வந்தனர். அவர்களுக்கு ஆசிரியை வின்னி பிரிசில்லா வீட்டை காண்பித்துள்ளார்.

அப்போது அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காண்பித்து பிரிசில்லாவின் கழுத்தில் வைத்து அவர் அளிந்திருந்த தங்க சங்கிலையை பறித்துக்கொண்டு ஓடியுள்ளனர். இது தொடர்பாக அவர் ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று (டிசம்பர் 16) உழவர்கரை சீனுவாசா குடியிருப்பு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இரண்டு வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரித்தபோது, ஆசிரியையிடம் நகை பறித்ததும் தெரியவந்துள்ளது. அதன்படி ஜாவ் 28, கவுதம் 29 ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தது மட்டுமின்றி அவர்கள் பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

Source, Image Courtesy: Daily Thanthi


Next Story
கதிர் தொகுப்பு
Trending News