Kathir News
Begin typing your search above and press return to search.

ஜனாதிபதி தேர்தல்: புதுச்சேரி வாக்குப்பெட்டி பாராளுமன்றத்தில் ஒப்படைத்த அதிகாரிகள்!

ஜனாதிபதி தேர்தல்: புதுச்சேரி வாக்குப்பெட்டி பாராளுமன்றத்தில் ஒப்படைத்த அதிகாரிகள்!

ThangaveluBy : Thangavelu

  |  19 July 2022 12:42 PM GMT

புதுச்சேரி சட்டசபை கமிட்டி அறையில் நடைபெற்ற வாக்குப்பதிவில் 30 எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் எம்.பி., வைத்திலிங்கம் உள்ளிட்டோர் வாக்குகளை பதிவு செய்தனர்.

மேலும், புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி., செல்வகணபதி பாராளுமன்றத்தில் வாக்குப்பதிவு செய்தார். அதன்படி நேற்று மாலை (ஜூலை 18) 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்தது. இதனை தொடர்ந்து வாக்குப்பெட்டிக்கு சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பான அறையில் வைக்கப்பட்டது.

இந்நிலையில், புதுச்சேரியில் இருந்து வாக்குப்பெட்டி பத்திரமாக இன்று சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து விமானம் மூலமாக டெல்லிக்கு எடுத்து செல்லப்பட்டது. பின்னர் டெல்லியில் பாராளுமன்ற ராஜ்யசபா செயலாளரிடம் புதுச்சேரி சட்டசபை செயலர் முனுசாமி மற்றும் தேர்தல் அதிகாரி வாக்கு பெட்டி மற்றும் உபகரணங்களை ஒப்படைத்தனர். அதே போன்று மற்ற மாநிலங்களில் இருந்தும் வாக்குப்பெட்டிகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இவை அனைத்தும் வருகின்ற வியாழக்கிழமை எண்ணிக்கை நடைபெறும்.

Source, Image Courtesy: Maalaimalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News