Kathir News
Begin typing your search above and press return to search.

சாலையில் திடீரென பற்றி எரிந்த கார்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தந்தை, மகள்!

புதுச்சேரியில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென்று பற்றி எரிவதற்கு முன்னர் தந்தை, மகள் இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

சாலையில் திடீரென பற்றி எரிந்த கார்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தந்தை, மகள்!

ThangaveluBy : Thangavelu

  |  16 Oct 2021 9:46 AM GMT

புதுச்சேரியில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென்று பற்றி எரிவதற்கு முன்னர் தந்தை, மகள் இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

புதுச்சேரி, லாஸ்பேட்டை நாவற்குளம் ரத்தினவேல் நகரைச் சேர்ந்தவர் குல் 54, இவர் காலாப்பட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். குல் தனது உறவினரின் டாடா இண்டிகோ காரை எடுத்துக்கொண்டு தனது மகளுடன் கடைக்கு ஓட்டி சென்றுள்ளார். அப்போது சிறிது தொலைவு சென்றவுடன் கார் எஞ்சினில் இருந்து புகை வரத் தொடங்கியது. காரில் இருந்து புகை வருவது நிற்கவில்லை இதனால் அச்சமடைந்த குல், நாவற்குளம் மாரியம்மன் கோயில் அருகில் நிறுத்தியுள்ளார். இதன் பின்னர் தனது மகளுடன் காரை விட்டு இறங்கி சிறிது தூரம் தள்ளிச்சென்று நின்றுகொண்டார்.

அடுத்த சில விநாடிகளில் கார் திடீரென்று தீப்பற்றி எரியத் தொடங்கியது. இது பற்றி தகவல் அறிந்து தீயணைப்புத் துறையினர் வருவதற்குள் கார் முழுவதுமாக எரிந்துள்ளது. இது தொடர்பாக லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீப்பிடிப்பதற்கு முன்பாகவே தந்தை, மகள் இறங்கி சென்றதால் இருவரும் உயிர் தப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: News 18 Tamil


Next Story
கதிர் தொகுப்பு
Trending News