Kathir News
Begin typing your search above and press return to search.

இலங்கை கடற்படை சிறைபிடித்த மீனவர்களை விடுவிக்க முதலமைச்சர் ரங்கசாமி கடிதம்!

இலங்கை கடற்படை சிறைபிடித்த மீனவர்களை விடுவிக்க முதலமைச்சர் ரங்கசாமி கடிதம்!

ThangaveluBy : Thangavelu

  |  5 July 2022 1:06 PM GMT

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 12 மீனவர்களையும் உடனடியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார்.

முதலமைச்சர் ரங்கசாமி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி மாநிலம், காரைக்கால் கீழகாசாக்குடிமேட்டை சேர்ந்தவர்கள் 12 மீனவர்கள். இவர்களுக்கு சொந்தமான படகில் கடந்த 3ம் தேதி ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அவர்களை இலங்கை கடற்படை எல்லை தாண்டி வந்ததாக கைது செய்தது. மேலும், கடற்படை மீனவரின் படகுகளையும் பறிமுதல் செய்தது.

எனவே இலங்கை கடற்படை சிறைபிடிக்கப்பட்ட 12 மீனவர்களையும், அவர்களுடைய மீன்பிடி படகுகளையும் விடுவிப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Daily Thanthi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News