Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி : என்னாது ஒட்டக பாலில் மில்க் ஷேக் இல்லையா-  கஞ்சா போதையில் போக்கரியை சூரையாடிய 3 இளைஞர்கள்.!

புதுச்சேரி : என்னாது ஒட்டக பாலில் மில்க் ஷேக் இல்லையா-  கஞ்சா போதையில் போக்கரியை சூரையாடிய 3 இளைஞர்கள்.!

புதுச்சேரி : என்னாது ஒட்டக பாலில் மில்க் ஷேக் இல்லையா-  கஞ்சா போதையில் போக்கரியை சூரையாடிய 3 இளைஞர்கள்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  9 Nov 2020 9:19 AM GMT

புதுச்சேரி அரியாங்குப்பத்தில் செல்வராஜூம், அவரது மருமகன் நாராயணனும் பேக்கரி, டீ கடை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பேக்கரிக்கு வந்த மூன்று பேர், ஒட்டகப்பாலில் மில்க் ஷேக் கேட்டிருக்கிறார்கள். ஒட்டகப்பால் இங்கே இல்லை என்று நாராயணன் கூறியிருக்கிறார். ஆனாலும் கடையை விட்டு செல்லாமல் ஒட்டக பாலில் மில்க் ஷேக் கேட்டுள்ளனர்.

இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒட்டக பால் கேட்ட இளைஞர்கள் கஞ்சா போதையில் இருந்துள்ளனத். அதனைத் தொடர்ந்து போதை இளைஞர்கள் ஆத்திரத்தில் கடையை சூறையாடிவிட்டு, கடை ஊழியர்களை தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரித்தபோது, வேல்ராம்பட்டு பகுதியை சேர்ந்த கோகுல், உதயா, முருகவேல் ஆகிய மூன்று பேரும் கஞ்சா போதையில் அப்படிச்செய்தது தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

வடிவேலு பாணியில் புதுச்சேரியில் ஒட்டக பாலில் மில்க் ஷேக் கேட்டு கடையை சூரையாடியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News