Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி சட்டசபையில் பா.ஜ.க ஆதரவு MLAக்கள் புகார் - பரபரப்புக்கு காரணம் என்ன?

புதுச்சேரி சட்டசபையில் பா.ஜ.க கட்சியினருக்கு ஆதரவாக இருந்ததால் MLAக்களுக்கு போதிய ஒத்துழைப்பு தராத காங்கிரஸ்.

புதுச்சேரி சட்டசபையில் பா.ஜ.க ஆதரவு MLAக்கள் புகார் - பரபரப்புக்கு காரணம் என்ன?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  25 Aug 2022 12:39 PM GMT

புதுச்சேரியில் பட்ஜெட் தாக்கல் மீதான விவாதத்தின் போது, தங்கள் தொகுதி புறக்கணிக்கப்பட்டு வருவதாக ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ஜ.க ஆதரவு எம்எல்ஏக்கள் தற்போது புகார் அனுப்பினார்கள். இந்தப் புகாரின் ஆல் தற்போது அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க கூட்டணி அரசு அமைத்துள்ளது. என் ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி அவர்கள் முதல்வராக இருந்து வருகிறார்.


மேலும் பா.ஜ.க ஆதரவு MLAக்கள் சிவசங்கர், கொல்லப்பள்ளி ஸ்ரீனிவாஸ் அசோக் ஆகியோர் தங்கள் தொகுதியின் அடிப்படையில் வசதி செய்ய நிதி ஒதுக்கவில்லை என்று கூறியுள்ளார்கள். மேலும் வாரிய தலைவர் பதவி வழங்க வில்லை என்றும் கூறியிருக்கிறார்கள். இத்தகைய காரணங்களால் அவர்களுக்கு ஒதுக்கப்படுகிறார்கள். பா.ஜ.கவினருக்கு நாங்கள் ஆதரவாக இருப்பதால் காங்கிரஸ் இது மாதிரியான செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.


மேலும் பட்ஜெட் தாக்கலின் போது பாஜக MLA கல்யாணசுந்தரம் அவர்கள் அரசின் மீது அதிருப்தியை வெளிப்படுத்தினார். ஏனெனில், எங்களிடம் சொல்லாமலேயே பல்வேறு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க பதவியில் அமர்த்துகிறார்கள்.அரசு இப்படி செய்வதற்கு என்ன காரணம்? எந்த MLAக்கள் சப்போர்ட் செய்யப் போகின்றனர் என்பதால் இப்படி செய்கிறார்களா? என்று கேள்வியும் முன்வைத்துள்ளார்கள்.

Input & Image courtesy: Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News