Kathir News
Begin typing your search above and press return to search.

மீனவர்கள் பேசியதை மாற்றி ராகுலிடம் கூறிய புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி.!

மீனவர்கள் பேசியதை மாற்றி ராகுலிடம் கூறிய புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி.!

மீனவர்கள் பேசியதை மாற்றி ராகுலிடம் கூறிய புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  17 Feb 2021 6:41 PM GMT

புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் அங்கு அரசியல் கட்சிகள் படையெடுக்க தொடங்கியுள்ளது. அதே போன்று இன்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீனவர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தார். அவருடன் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மொழி பெயப்பதற்காக உடனிருந்தார்.
அப்போது ஒரு பெண் எழுந்து புயல் வந்தபோது முதலமைச்சரோ அல்லது அமைச்சர்களோ வந்து மீனவ மக்களை பார்க்கவே இல்லை என்று ராகுல் காந்தியிடம் கூறினார்.

அப்போது அங்கு மொழி பெயர்த்த முதலமைச்சர் நாராயணசாமி, புயல் வந்தபோது நாங்கள் உதவி செய்ததை அந்த பெண் குறிபிட்டார் என்று பேச்சை சமாளிச்சார். ஆனால் இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ஒரு காங்கிரஸ் கட்சி தலைவர் முன்பே ஒரு முதலமைச்சர் எவ்வளவு நேக்கா பொய் சொல்கிறார் என்றால், மக்களின் பிரச்சனைகளையும் இவர்கள் எப்படி தீர்ப்பார்கள் என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News