Begin typing your search above and press return to search.
குறைந்து வரும் கொரோனா.. அரசு ஊழியர்கள் 100 சதவீதம் பணிக்கு வர புதுச்சேரி அரசு உத்தரவு.!
இதனால் நாளை முதல் ஊழியர்கள் பணிக்கு செல்வதால் அரசு பணிகள் முழு வீச்சில் இயங்குவதற்கு வாய்ப்புள்ளது.
By : Thangavelu
அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் 100 சதவீதம் பணிக்கு வரவேண்டும் என்று புதுச்சேரி மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிக வேகமாக குறைந்து வருகிறது. இதனால் அம்மாநில அரசு புதிய உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.
இந்நிலையில், தற்போது மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளது. இதனால் அரசு அலுவலகங்களில் குரூப் பி மற்றும் குரூப் சி ஊழியர்கள் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கையை கடைப்பிடித்து நாளை முதல் பணிக்கு வருவதற்கு புதுச்சேரி அரசு சார்பு செயலர் ஜெய்சங்கர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதனால் நாளை முதல் ஊழியர்கள் பணிக்கு செல்வதால் அரசு பணிகள் முழு வீச்சில் இயங்குவதற்கு வாய்ப்புள்ளது.
Next Story