Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழர் ஜனாதிபதியாவதை தடுத்தது தி.மு.க தான்.. புதுச்சேரி கவர்னர் தமிழிசை குற்றச்சாட்டு..

தமிழர் ஜனாதிபதி ஆவது மீண்டும் ஒருமுறை தடுத்தது உண்மையில் தி.மு.க தான்.

தமிழர் ஜனாதிபதியாவதை தடுத்தது தி.மு.க தான்.. புதுச்சேரி கவர்னர் தமிழிசை குற்றச்சாட்டு..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  14 Jun 2023 9:54 AM GMT

புதுச்சேரி அரசு மருத்துவ கல்லூரியின் அங்கீகாரத்தை திரும்ப பெற அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இன்னும் ஓரிரு நாளில் அதிகாரபூர்வமான அறிவிப்பு வந்து விடும். இதற்கான அனைத்து முயற்சிகளையும் தற்போது புதுச்சேரி அரசு உயர் கொண்டு உள்ளது என்று அவர் குறிப்பிட்டு இருந்தார். மேலும் தற்பொழுது சர்ச்சை ஏற்படுத்திய பிரதமர் மு.க. ஸ்டாலின் அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழிசை தன்னுடைய கருத்தை பதிவு செய்து இருக்கிறார். தமிழர்கள் பிரதமராக ஆவதற்கான வாய்ப்பு தி.மு.க.வால் தான் மறுக்கப்பட்டது என்பதை தான் உள்துறை மந்திரி அமித்ஷா தெளிவாக கூறியிருந்தார்.


வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு தி.மு.க.வின் பங்கு இருப்பதாக அவர் கூறியதை தி.மு.க.வினர் சுற்றி வளைத்து எப்படி கூறினாலும் அதில் உள்ள உண்மையை மறைக்க முடியாது. குறிப்பாக தமிழர்கள் பிரதமராக வருவதை திமுக தடுத்தார்கள் மற்றும் மறுத்தார்கள். அவர்கள் செய்த குற்றம் சரித்திரத்தில் இருந்து மறுக்கப்படாது. ஏனெனில் அவை ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ஒரு குற்றமாகும் என்று குறிப்பிட்டு இருந்தார்.


சரித்திரம் மறைக்கப்படக்கூடாது என்பதற்காக அவர்களின் குற்றத்தை நேரடியாக எடுத்துச்சொல்லும் போது சரித்திரத்தை மறைப்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏதோ சொல்கிறார். அதை ஒரு கருத்தாக ஏற்றுக்கொள்ள முடியாது. பிரதமர் மோடி அளவுக்கு யாரும் தமிழை கையாண்டது கிடையாது. பச்சை தமிழராகவே பிரதமர் மோடி பணியாற்றிக்கொண்டு இருக்கிறார்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News