Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி: போதைப் பொருள் விற்பனையை தடுக்க புதிய அதிரடி நடவடிக்கை!

புதுச்சேரியில் போதை பொருள் விற்பனையை தடுக்க வேண்டும்.

புதுச்சேரி: போதைப் பொருள் விற்பனையை தடுக்க புதிய அதிரடி நடவடிக்கை!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  12 April 2023 1:23 AM GMT

புதுவையில் பள்ளி மற்றும் கல்லூரி வழிபாட்டு தலங்கள் போன்ற பகுதியில் போதை பொருள் விற்பனையை தடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். நேற்று, காரைக்கால் மாவட்டத்தில் போதை பொருளை முற்றிலும் ஒழிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் தலைமை தாங்கி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.


இதில் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன், துணை கலெக்டர்கள் ஜான்சன், பாஸ்கரன் போலீஸ் சூப்பிரண்டுகள் சுப்பிரமணி, நிதின் கவ்ஹால் ரமேஷ் மற்றும் நலவழித்துறை, கல்வித்துறை, வருவாய்துறை, சமூக நலத்துறை, அனைத்து கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் மற்றும் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர். விழிப்புணர்வு நிகழ்ச்சியில், காரைக்கால் மாவட்டத்தில் போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க, பள்ளி மாணவர்களுக்கு சமூக நலத்துறை மூலம் பல்வேறு கட்டங்களாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும்.


பள்ளி, கல்லூரி மற்றும் வழிப்பாட்டு தலங்கள் அருகில் உள்ள பெட்டிக்கடைகளில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை நீங்கள் கண்காணித்து, பறிமுதல் செய்யவேண்டும். மேலும் கடல் வழியாகவோ, சாலை வழியாகவோ போதைப்பொருள் காரைக்காலுக்கு கடத்தப்படுகிறதா? என்பதையும் கண்காணித்து தடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கூறினார்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News