Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா தொற்று குறைவால் புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை உயர்வு!

கொரோனா தொற்று குறைவால் புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை உயர்வு!

ThangaveluBy : Thangavelu

  |  19 March 2022 5:10 AM GMT

கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் அதிகரிப்பால் புதுச்சேரியில் களைகட்ட தொடங்கியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பெருந்தொற்று குறைந்துள்ளது. இதனால் சுற்றுலா நகரங்களுக்கு மக்கள் படையெடுக்க தொடங்கியுள்ளது. அதே போன்று புதுச்சேரியிலும் தொற்று பரவல் குறைந்துவிட்டது. எங்கு வெளியில் சென்றால் கொரோனா பரவிவிடும் என்ற அச்சத்திலிருந்து மக்கள் விடுபட்டு தற்போது சகஜ நிலைக்கு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு பின்னர் புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்க தொடங்கியுள்ளது. எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகளின் தலைகளாக தெரிகிறது. தற்போது விடுமுறை நாள் என்பதால் கூடுதலான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர். இதனால் புதுவை சுற்றுலா நகரம் களைகட்ட தொடங்கியுள்ளது. அனைத்து கடைகளிலும் நல்ல வியாபாரம் நடைபெறுகிறது. இதனால் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துளனர்.

Source: Daily Thanthi

Image Courtesy: Destination Reporter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News