புதுச்சேரி: கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே ஜிப்மரில் சிகிச்சை.!
மருத்துவமனை மூலம் பரவுவதை தவிர்க்க, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வருகின்ற 9ம் தேதி முதல் அனைத்து மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை பிரிவுகளில் முன்பதிவு செய்து தொலை மருத்துவ ஆலோசனைக்கு பின்னரே வெளிப்புற சிகிச்சை சேவைகள் வழங்கப்படும்.
By : Thangavelu
கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் முன்பதிவு செய்தால் மட்டுமே புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்று ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது பற்றி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர் ராகேஷ் அகர்வால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் மருத்துவமனைக்கு வரும் கூட்டங்களை கட்டுப்படுத்த இயலாததாகும்.
மேலும, மருத்துவமனை மூலம் பரவுவதை தவிர்க்க, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வருகின்ற 9ம் தேதி முதல் அனைத்து மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை பிரிவுகளில் முன்பதிவு செய்து தொலை மருத்துவ ஆலோசனைக்கு பின்னரே வெளிப்புற சிகிச்சை சேவைகள் வழங்கப்படும்.
அப்படி வெளிப்புற சிகிச்சை பெற விரும்புவோர் தொலைபேசி மூலம் முன்பதிவு செய்து கொள்வது கட்டாயமாகும். அதே போன்று அவசர சேவைகள் பிரிவு எப்போதும் செயல்படும். இதற்கான www.jipmer.edu.in ஆன்லைன் வலைதளங்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.