Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரியில் அதிகரிக்கும் கொரோனா: அரசு மருத்துவமனை மூடல்.!

பிரதமர் மோடி நேற்று அனைத்து மாநில முதலமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

புதுச்சேரியில் அதிகரிக்கும் கொரோனா: அரசு மருத்துவமனை மூடல்.!

ThangaveluBy : Thangavelu

  |  9 April 2021 5:01 AM GMT

புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில், கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மருத்துவமனையில் கொரோனா பிரிவு தவிர மற்ற பிரிவுகள் இன்று முதல் மூடப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.





இந்தியாவில் கடந்த ஒரு சில வாரமாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் குறிப்பிட்ட மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் மீண்டும் படுக்கைகள் நிரம்பத்தொடங்கியுள்ளது. இதனிடையே பிரதமர் மோடி நேற்று அனைத்து மாநில முதலமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது தடுப்பூசி போடும் பணிகளை அதிகப்படுத்த வேண்டும் என கூறியிருந்தார்.





இந்நிலையில், புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனையடுத்து புதுச்சேரி கதிர்காமம், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மருத்துவமனையில் கொரோனா பிரிவு தவிர்த்து மற்ற பிரிவுகள் இன்று முதல் மூடப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News