Begin typing your search above and press return to search.
புதுச்சேரி: கடற்கரை சாலை, பூங்காக்கள் திறக்க அனுமதி.!
கடற்கரை சாலை மற்றும் பூங்காக்கள் இரவு 9 மணி வரை திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து கடைகளும் இரவு 9 மணி வரை திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
By : Thangavelu
புதுச்சேரியில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு ஜூலை 15ம் தேதி வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதுச்சேரியில் தற்போதைய கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது பற்றி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கடற்கரை சாலை மற்றும் பூங்காக்கள் இரவு 9 மணி வரை திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து கடைகளும் இரவு 9 மணி வரை திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உடற்பயிற்சி மற்றும் யோகா மையங்களில் 50 சதவீத பேர் பயிற்சி மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.சினிமா தியேட்டர், மல்டிபிளெக்ஸ்களுக்கு ஊரடங்கில் விதிக்கப்பட்ட தடை நீடிக்கும். சமூக, அரசியல் மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான கூட்டங்களுக்கு தடை நீடிக்கும்.
Next Story