Kathir News
Begin typing your search above and press return to search.

இடி, மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழை: வெள்ளக்காடாக மாறிய புதுவை!

இடி, மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழை: வெள்ளக்காடாக மாறிய புதுவை!

ThangaveluBy : Thangavelu

  |  22 July 2022 6:59 AM GMT

இடி, மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழையால் புதுச்சேரி வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதனால் பல வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், புதுச்சேரியில் நேற்று (ஜூலை 21) வழக்கம் போன்று காலை நேரத்தில் வெயில் வாட்டி வதைத்தது. இதற்கிடையில் 9 மணியளவில் திடீரென்று இடி, மின்னலுடன் கனமழை கொட்டியது. இதனால் தொடர்ந்து பெய்து வந்த மழையால் புதுவை வெள்ளக்காடாக மாறியது. மழை தண்ணீரை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் அரசு மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

Source, Image Courtesy: Daily Thanthi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News