Kathir News
Begin typing your search above and press return to search.

விவசாயிகளின் வங்கிக்கணக்கில் மழை நிவாரணம்: அரசாணை வெளியிட்ட புதுச்சேரி அரசு!

விவசாயிகளின் வங்கிக்கணக்கில் மழை நிவாரணம்: அரசாணை வெளியிட்ட புதுச்சேரி அரசு!

ThangaveluBy : Thangavelu

  |  8 March 2022 4:29 AM GMT

விவசாயிகளுக்கான மழை நிவாரணத் தொகை அவர்களின் வங்கிக்கணக்கிலேயே இன்று முதல் செலுத்தப்படுகிறது.

புதுச்சேரி மாநிலத்தில் பெய்த பருவமழையால் விவசாயிகள் சாகுபடி செய்த பயிர்கள் அனைத்தும் வீணாகியது. இதனால் உடனடியாக நிவாரணத்தொகை வழங்குவதற்காக அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி கணக்கெடுக்கும் பணியை தொடங்கினர். அதன் பணிகள் நடைபெற்று முடிந்தநிலையில் தற்போது வங்கிக்கணக்கில் நிவாரணத்தொகை செலுத்தப்பட இருக்கிறது.

அதன்படி ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் மாநில நிதியிலிருந்து வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார். அதன்படி ரூ.7 கோடியே 10 லட்சத்து 57 ஆயிரத்து 600 வழங்குவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளதால் இன்று முதல் நிவாரணத்தொகை வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது.

Source: Daily Thanthi

Image Courtesy: Deccan Herald

Next Story
கதிர் தொகுப்பு
Trending News