Begin typing your search above and press return to search.
பணியில் இறந்த காவலர்களுக்கு முதலமைச்சர் ரங்கசாமி அஞ்சலி !
காவலர் நினைவு தினத்தை முன்னிட்டு பணியின் போது உயிரிழந்த காவலர்களுக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அஞ்சலி செலுத்தினார்.

By :
காவலர் நினைவு தினத்தை முன்னிட்டு பணியின் போது உயிரிழந்த காவலர்களுக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அஞ்சலி செலுத்தினார்.
கடந்த 1959ம் ஆண்டு நடந்த சண்டையில் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த 20 காவலர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவத்தை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 21ம் தேதி காவலர் நினைவு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் காவலர் நினைவு நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு டிஜிபி ரன்வீர்சிங் கிருஷ்ணியா தலைமை வகித்தார். முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர் நம்ச்சிவாயம் ஆகியோர் கலந்து கொண்டு போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர். இதன் பின்னர் காவலர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
Source, Image Courtesy: Daily Thanthi
Next Story