Kathir News
Begin typing your search above and press return to search.

காமராஜர் மணிமண்டபத்தில் முதலமைச்சர் ரங்கசாமி திடீர் ஆய்வு!

காமராஜர் மணிமண்டபத்தில் முதலமைச்சர் ரங்கசாமி திடீர் ஆய்வு!

ThangaveluBy : Thangavelu

  |  22 Jan 2022 3:49 AM GMT

காமராஜர் மணிமண்டபத்தை திடீரென்று முதலமைச்சர் ரங்கசாமி ஆய்வு மேற்கொண்டார். அங்கு உலகத்தரம் வாய்ந்த நூலகம் அமைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் கருவடிக்குப்பத்தில் ரூ.23 கோடி மதிப்பீட்டில் காமராஜர் மணிமண்டபத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை கடந்த 12ம் தேதி பிரதமர் மோடி காணொலிக்காட்சியின் வாயிலாக திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி காமராஜர் மணிமண்டபத்துக்கு திடீரென்று சென்று கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது அங்கு இருந்த அதிகாரிகளிடம் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் மணிமண்டப வளாகத்தில் உலகத்தரம் வாய்ந்த நுலகத்தை அமைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். அது மட்டுமின்றி வளாகத்தை சுற்றிலும் கல்வி அலுவலகங்கள் மற்றும் வண்ண விளக்குகள் எங்கெங்கு பொருத்துவது உள்ளிட்டவைகளை அதிகாரிகளிடம் கேட்டறிந்த பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Source, Image Courtesy: Daily Thanthi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News