Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரியில் சாலை ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றம்!

புதுச்சேரியில் சாலை ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றம்!

ThangaveluBy : Thangavelu

  |  16 July 2022 11:32 AM GMT

மாணவன் விபத்தில் உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக புதுவை ரெட்டியார்பாளையம் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

மேலும், மாணவன் உயிரிழந்தத்தை தொடர்ந்து புதுச்சேரி இந்திரா காந்தி சதுக்கம் பகுதியில் கடந்த 14ம் தேதி காலை 2 விபத்துக்கள் அடுத்தடுத்து நடந்தது.

இந்த சம்பவத்தில் பள்ளி மாணவன் கிருஷ்வாந்த் பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தான். மேலும், காலாப்பட்டு நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்று தறிகெட்டு ஓடி தடுப்பு சுவற்றில் மோதியது. விபத்து ஒன்றில் பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் புதுச்சேரியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஆக்கிரமிப்பு அகற்றம் மற்றும் இந்திரா காந்தி சதுக்கம் முதல் மூலக்குளம் வரையில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தலைமையில் போக்குவரத்து மற்றும் சட்டம், ஒழுங்கு போலீசார் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட பல்வேறு கட்டிடங்கள் ஜே.சி.பி., இயந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.

Source, Image Courtesy: Daily Thanthi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News