Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரியில் அதிர்ச்சி: இருசக்ககர வாகனத்தில் சென்ற பெண் வெள்ளத்தில் அடித்துசெல்லப்பட்டார்.!

புதுச்சேரியில் அதிர்ச்சி: இருசக்ககர வாகனத்தில் சென்ற பெண் வெள்ளத்தில் அடித்துசெல்லப்பட்டார்.!

புதுச்சேரியில் அதிர்ச்சி: இருசக்ககர வாகனத்தில் சென்ற பெண் வெள்ளத்தில் அடித்துசெல்லப்பட்டார்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  21 Feb 2021 5:39 PM GMT

புதுச்சேரியில் பெய்து வரும் கனமழையின்போது சாலையின் சென்ற பெண் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக புதுச்சேரியில் அதிகாலை முதல் மழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் புதுச்சேரி நகர் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது. அது மட்டுமின்ற சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதில் காலாபேட், கனகசெட்டிகுளம், வில்லியனூர் உள்ளிட்ட இடங்களில் கொட்டித்தீர்க்கும் கனமழையால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.

இந்நிலையில், புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் ஒருவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள வாய்க்காலில் அடித்து செல்லப்பட்டுள்ளார். வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர் பெயர் ஹசினா என கூறப்படுகிறது. அவரை தீயணைப்புத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் புதுச்சேரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News