Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி ஆன்மீக மண் என்பதை அறிவேன்: புதிய டி.ஜி.பி. பேட்டி!

புதுச்சேரி ஆன்மீக மண் என்பதை அறிவேன்: புதிய டி.ஜி.பி. பேட்டி!

ThangaveluBy : Thangavelu

  |  26 July 2022 11:04 AM GMT

புதுவை டி.ஜி.பி.யாக கடந்தாண்டு பொறுப்பேற்றுக் கொண்ட ரன்வீர் சிங் கிருஷ்ணியா டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளார். அதன்படி புதிய டி.ஜி.பி.யாக மனோஜ்குமார் லால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி சில நாட்களுக்கு முன்னர் புதுச்சேரிக்கு வந்த அவர் நேற்று (ஜூலை 25) மாலை டி.ஜி.பி.யாக பதவியேற்றுக்கொண்டார். அவரை டி.ஜி.பி. இருக்கையில் ரன்வீர் சிங் கிருஷ்ணியா அமர வைத்து முறைப்படி பொறுப்புகளை ஒப்படைத்தார்.

இந்நிலையில், இன்று (ஜூலை 26) காலை முதலமைச்சர் ரங்கசாமியை புதிய டி.ஜி.பி., மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: புதுச்சேரிக்கு பல்வேறு வரலாறு உள்ளதால் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மிகவும் அமைதியான முறையில் புதுச்சேரி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

ஆன்மீகமும், பல வரலாற்றுகளையும் புதுச்சேரி பெற்றிருப்பதை நான் அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். நான் புதுச்சேரிக்கு உறுதுணையாக செயலாற்றுவேன். எனவே ரவுடிகளை ஒடுக்கவும், போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கு தனி கவனம் செலுத்துவேன். இவ்வாறு புதிய டி.ஜி.பி., கூறினார்.

Source, Image Courtesy: Maalaimalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News