Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி - அதிகமாக பரவும் வைரஸ் காய்ச்சலால் 829 குழந்தைகள் பாதிப்பு!

அதிகமாக பரவும் வைரஸ் காய்ச்சலின் காரணமாக புதுச்சேரியில் 829 காய்ச்சல் வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன.

புதுச்சேரி - அதிகமாக பரவும் வைரஸ் காய்ச்சலால் 829 குழந்தைகள் பாதிப்பு!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  23 Sep 2022 3:28 AM GMT

புதுச்சேரிகள் தற்பொழுது வைரஸ் காய்ச்சல் தற்போது அதிகமாகவே இருந்து வருகின்றது. இதன் காரணமாக கடந்த மூன்று நாட்களுக்கு முன்னதாகவே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் சற்று அதிகமாக பரவி வரும் இந்த காய்ச்சலின் காரணமாக, கடந்த 24 மணி நேரத்தில் எம்.சி.ஆர்.ஐயில் 13 பேரும், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 50 பேரும், காரைக்காலில் உள்ள ஜி.ஹெச் மருத்துவமனையில் 9 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


சுகாதாரத் துறையின் கூற்றுப்படி, IGMCRI இல் 66 வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த காய்ச்சல் வழக்குகள் கடந்த இரண்டு நாட்களாக அதிகமாக இருந்து வருவதாகவும் சுகாதாரத் துறையின் சார்பில் கூறப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பதிவான 829 குழந்தைகள் காய்ச்சல் பாதிப்புகளில் 199 குழந்தைகள் காய்ச்சல் வார்டுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுச்சேரியில் உள்ள ராஜீவ் காந்தி பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் 697 பேரும், காரைக்காலில் உள்ள பொது மருத்துவமனையில் 66 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


கடந்த 24 மணி நேரத்தில் IGMCRI யில் 13 பேரும், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 50 பேரும், காரைக்காலில் உள்ள ஜி.ஹெச் மருத்துவமனையில் 9 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஐஜிஎம்சிஆர்ஐயில் 37 வார்டு நோயாளிகளும், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 140 பேரும், காரைக்காலில் உள்ள பொது மருத்துவமனையில் 22 பேரும் உள்ளனர்.

Input & Image courtesy: The Hindu

Next Story
கதிர் தொகுப்பு
Trending News