Kathir News
Begin typing your search above and press return to search.

கிரண்பேடிக்கு எதிராக போராட்டம்.. புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் குவிக்கப்பட்ட பாதுகாப்புப் படையினர்.!

கிரண்பேடிக்கு எதிராக போராட்டம்.. புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் குவிக்கப்பட்ட பாதுகாப்புப் படையினர்.!

கிரண்பேடிக்கு எதிராக போராட்டம்.. புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் குவிக்கப்பட்ட பாதுகாப்புப் படையினர்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  7 Jan 2021 7:15 PM GMT

புதுச்சேரியில் ஆளுநர் கிரண்பேடிக்கும் முதலமைச்சர் நாராணயசாமி அரசுக்கும் இடையே மிகப்பெரிய பனிப்போர் நடந்து வருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை சுதந்திரமாக செயல்பட விடவில்லை என்று அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி கிரண்பேடி மீது கடுமையான குற்றச்சாட்டை வைத்துள்ளார். அதே நேரத்தில் தன்னுடைய அதிகார வரம்பிற்குள்தான் செயல்படுகிறேன் எனவும் ஆளுநர் விளக்கமும் அவ்வப்போது அளித்து வருகிறார்.

புத்தாண்டை முன்னிட்டு முதலமைச்சர் நாராயணசாமி அனுமதி அளித்தார். ஆனால் இதற்கு ஆளுநர் கிரண்பெடி கொரோனா தொற்று நேரத்தில் இது போன்று செயல்படுவது கூடாது என எதிர்ப்பு தெரிவித்ததோடு தடையும் விதித்தார்.

இந்நிலையில், நாளை காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகள் இணைந்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இதன் காரணமாக இன்று மாலை முதலே ஆளுநர் மாளிகை முன்பு ஏராளமான பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News