Kathir News
Begin typing your search above and press return to search.

கால்நடை விவசாயிகளுக்கு மானிய விலையில் பசுந்தீவனம்: புதுச்சேரி அரசு அசத்தல்!

கால்நடை விவசாயிகளுக்கு மானிய விலையில் பசுந்தீவனம்: புதுச்சேரி அரசு அசத்தல்!

ThangaveluBy : Thangavelu

  |  28 March 2022 10:20 AM GMT

புதுச்சேரி அரசின் கால்நடைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு மானிய விலையில் பசுந்தீவனம் வழங்கி வருகிறது.

தற்போது கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வறட்சியால் கால்நடைகளுக்கு போதுமான தீவனம் கிடைக்காமல் அவதியுற்று வருகின்றனர். இதனை கருத்தில் கொண்ட புதுச்சேரி அரசு விவசாயிகள் அனைவருக்கும் மானிய விலையில் பசுந்தீவனம் வழங்க உத்தரவிட்டுள்ளது.

அதன்படி காரைக்கால் மாவட்ட கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை மூலமாக, கறவை மாடுகளுக்கும், கன்று குட்டிகளுக்கும் 75 சதவீத மானிய விலையில் பசுந்தீவனம் வழங்கும் நிகழ்ச்சி காரைக்கால் அருகே உள்ள கோட்டுச்சேரியில் நடைபெற்றது. இதனை போக்குவரத்து துறை அமைச்சர் சந்திரபிரியங்கா தலைமை ஏற்று விவசாயிகளுக்கு பசுந்தீவனம் வழங்கினார். இந்த நிழகச்சியில் எம்.எல்.ஏ., நாஜிமும், நாகதியாகராஜன் கலந்து கொண்டார்.

Source, Image Courtesy: Daily Thanthi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News