Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகம் மற்றும் புதுச்சேரி இடையே 70 நாட்களுக்கு பிறகு பேருந்து சேவை.!

தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு இடையே இன்று முதல் பேருந்துகள் இயக்கப்படுவதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 70 நாட்கள் கழித்து இன்று முதல் புதுவைக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரி இடையே 70 நாட்களுக்கு பிறகு பேருந்து சேவை.!

ThangaveluBy : Thangavelu

  |  12 July 2021 5:07 AM GMT

தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு இடையே இன்று முதல் பேருந்துகள் இயக்கப்படுவதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 70 நாட்கள் கழித்து இன்று முதல் புதுவைக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டது. தற்போது தொற்று பரவல் குறைந்து வருவதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை இரண்டு மாநில அரசுகளும் அறிவித்து வருகிறது.


இந்நிலையில், கடலூர் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து புதுச்சேரிக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இன்று காலை முதல் இயக்கப்படுகிறது. பேருந்துகள் இயக்கப்படுவதற்கு பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த 70 நாட்களாக இரண்டு மாநில மக்களும் கடும் அவதியுற்றநிலையில், இன்று பேருந்துகள் இயக்கப்படுவது மகிழ்ச்சியை அளிப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News