Kathir News
Begin typing your search above and press return to search.

பா.ஜ.க. பெண் நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் அதிரடி கைது!

பா.ஜ.க. பெண் நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் அதிரடி கைது!

ThangaveluBy : Thangavelu

  |  11 Jun 2022 4:54 AM GMT

மணவெளி தொகுதி அபிஷேகப்பாக்கம் கிராமத்தில் நடைபெற்ற கோயில் கும்பாபிஷேக விழாவில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், சபாநாயகர் உள்ளிட்டோரை வரவேற்கும் விதமாக டிஜிட்டல் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.

அதில் சபாநாயகர் செல்வம் உருவப்படம் அச்சிடப்பட்ட 2 டிஜிட்டல் பேனர்களை மர்மநபர்கள் கிழித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அபிஷேகப்பாக்கம் பிள்ளையார் கோயில் வீதியை சேர்ந்த பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் ஹேமமாலினி சந்தேகத்தின் பேரில் அப்பகுதியை சேர்ந்த வடிவேலு, கிருஷ்ணமூர்த்தி என்ற திவாகர், பூரணாங்குப்பம் பகுதியை சேர்ந்த சந்துரு உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினார்.

அப்போது ஆத்திரம் அடைந்த அந்த 3 பேரும் ஹேமலாலினியை மிகவும் ஆபாசமான வார்த்தைகளில் திட்டியது மட்டுமின்றி கொலை மிரட்டலும் விடுத்தனர். இது பற்றி தவளக்குப்பம் காவல் நிலையத்தில் ஹேமமாலினி புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source, Image Courtesy: Daily Thanthi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News